• If you like to upgrade your Account and Get New Special Badges? Click Here

இந்த வருட மேதினச் சடங்கு முடிந்தது

Balan72

Well-known member
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம் என்று..

சுதந்திரக் கவி பாடி மொத்தமாக நூறு வருஷம் கடந்தது தான் மிச்சம்.

உழவுக்கு தரித்திரம் பரிசாக கொடுத்தோம் மூர்க்கமாக அவன் பொருளுக்கு கொள்முதல் விலையை நிர்ணயித்து..
அவன் பொருளை வெளியே ஏற்றுமதி செய்யக்கூடாதெனத் தடுத்து..

தொழிலுக்கு முட்டுக்கட்டை போட்டோம் அப்புரூவலுக்கு லஞ்சம் கேட்கும் நிர்வாகச் சிற்றரசர்களின் அதிகாரத்தை குவித்து..

தொழிலாளியின் பர்ஸை பிக்பாக்கெட் அடித்தோம் அவனே அறியாமலேயே.. நோட்டடித்து அவனுக்கே ஓசியிலே கொடுத்து..

ஆனால்..
வீணில் உண்டு களிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போகிறது..
எப்புட்றா? என்று கேட்டால்..
சர்வீஸாம்..
ஆர்பிட்ராஜம்..
எப்ஃ அண்ட் ஓ வாம்
டெரிவேட்டிவாம்..
இங்கிலீஷ்லயே ப்ரஸட்டேஷன் பண்ணுவாங்களாம்..

இந்த முடிச்சவிக்களையெல்லாம் முழுசுதந்திரம் கொடுத்து பட்டப்பகலில் செயல்ட அனுமதித்துவிட்டு...

அப்புறம் வெக்கங்கெட்டுப்போய் இன்னும் ஏன் மே தினம் கொண்டாடுகிறோம்?

எவனாலும் வீணில் உண்டு களிக்க முடியாததொரு சமுதாய அமைப்பு அமலில் வரும் வரை நிகழும் மேதின அனுசரிப்பு ஒரு வருடாந்திரச் சடங்கு.

இந்த வருடச் சடங்கு இனிதே முடிந்தது.
இனி அடுத்தவருடம் மேதின லீவில் சிந்திப்போம் உழைப்பவனைப் பற்றி.

வாழ்க பாரதம்.
 
Last edited:
Back
Top